Wednesday, May 18, 2022
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர் சங்கத்தை சுடுகாடாக்கி விட்டனர்!நடிகர் விஷால் ஆவேசம்!

admin by admin
April 5, 2015
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘திருப்பாச்சி’,  ‘திருப்பதி’  பெற்ற வெற்றி ஒரு மாய வெற்றிதான்! இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு.

‘பவுடர்’ படத்தின் ‘ரத்த தெறி தெறி’  பாடல் ஜூன்  வெளீயீடு!

“நெஞ்சுக்கு நீதி” படக்குழுவினருக்கு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

DCIM (27) IMG_1195 IMG_1155 IMG_1133நடிகர் விஷால் தன் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார்.இது பற்றி விஷால் கூறும் போது ” நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள், பாடங்கள் கிடைத்தன.
திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த அளவுக்கு வருவதற்கு, ஆதரவு கொடுத்த ரசிகர்களும் காரணம். ஆனால், உண்மையைச் சொன்னால் வெட்கத்தை விட்டுச் சொன்னால் என் மாவட்ட நிர்வாகிகள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை.இந்த இடைவெளி தவிர என்தரப்பிலும் மன்றச் செயல் பாடுகளிலும் பல குறைகள் தென்பட்டன. அது மட்டுமல்ல என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைத்த ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு மாவட்ட நிர்வாகி. என்னை சந்திக்க முயன்றிருக்கிறார் தகவல் தொடர்பில் பிரச்சினை முடியவில்லை. சந்திக்க முடியாமலேயே போயிருக்கிறார். பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை உதவி கேட்டு வந்திருக்கிறார். மறுபடியும் சந்தித்த போது சொன்னார் அம்மா போய்ட்டாங்க.. அம்மா போனதுதான் மிச்சம்.ஆனாலும் நான் உங்களுக்காக வந்திருக்கிறேன். என்றார் இது நடந்தது 2009ல் அது என்னை காயப்படுத்தி பாதித்து விட்டது. மிகவும் வருத்தப்பட்டேன். எதனால் இப்படி ஆனது. தகவல்தொடர்பு இடைவெளி. நம் அணுகுமுறையில் எங்கோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளைக் கூட எனக்குச் சரியாக அடையாளம் தெரியவில்லையே என வருந்தினேன்.அதன்பிறகு யோசித்தேன். நாம் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். நிர்வாகிகளை மாற்றினேன். தலைவராக புதியவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளேன்.என் ரசிகர் மன்றம். இனி ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ என்று மாற்றப்படுகிறது. வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள்.. பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் கூட பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம்நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும்இது நாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்துவந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம்.முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன்.இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. நடிகர் சங்க விவகாரத்தை பொறுத்தவரை ,நடிகர் சங்கத் தலைவர்களில் சரத்குமார் ராதாரவி, அவர்கள் இருவர் மீது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவர் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். நடிகர் சங்க இடம் 19 கிரவுண்ட்.. ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பலரது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி சங்கம் வளர்ந்து கட்டடம் உருவானது. அந்த இடம் இன்று மயானம் போல காட்சி தருகிறது.அதைக் கட்டச்சொல்வது என் தனிப்பட்ட நலன் கருதியல்ல சுமார் 2500 சிரமப்படும் நடிகர்களுக்காத்தான்.அவர்களின் குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஏதாவது வழிபிறக்காதா என்கிற எண்ணத்தில்தான்.எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை. சங்கத்தின் பொறுப்பிலுள்ளவர்கள், பலபேர் மத்தியில் என்னை நாய் என்கிறார்கள் ராதாரவி இழிவாகப்பேசினார்.என்னைக் கடனை அடைக்கச் சொன்னார் நடிப்பைக் கற்றுக் கொள்ளச் சொன்னார். ஒவ்வொன்றாக நான் முடிப்பதற்குள் அவர்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள்.2500 குடும்ப மகிழ்ச்சிக்காகத்தான் இதைப் பேசுகிறேன். ஊழல் இல்லை என்கிறார்கள் .ஏன் அவர்கள் சொன்ன தேதியில்கூட கட்டடம் கட்டவில்லை. இந்த முறையாவது தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடக்கட்டும் .நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது.ஆனாலும் அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன்.என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக ஆதரிக்கிறார்கள் .இவ்வாறு விஷால் பேசினார்.

admin

admin

Related Posts

‘திருப்பாச்சி’,  ‘திருப்பதி’  பெற்ற வெற்றி ஒரு மாய வெற்றிதான்! இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு.
News

‘திருப்பாச்சி’,  ‘திருப்பதி’  பெற்ற வெற்றி ஒரு மாய வெற்றிதான்! இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு.

by admin
May 18, 2022
‘பவுடர்’ படத்தின் ‘ரத்த தெறி தெறி’  பாடல் ஜூன்  வெளீயீடு!
News

‘பவுடர்’ படத்தின் ‘ரத்த தெறி தெறி’  பாடல் ஜூன்  வெளீயீடு!

by admin
May 16, 2022
“நெஞ்சுக்கு நீதி” படக்குழுவினருக்கு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
News

“நெஞ்சுக்கு நீதி” படக்குழுவினருக்கு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

by admin
May 16, 2022
நடிகர் பிளாக் பாண்டியின் மனிதநேய முயற்சிக்கு துணை நிற்கும் சமுத்திரக்கனி!
News

நடிகர் பிளாக் பாண்டியின் மனிதநேய முயற்சிக்கு துணை நிற்கும் சமுத்திரக்கனி!

by admin
May 16, 2022
பாரதிராஜா , சத்யராஜ், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’.
News

பாரதிராஜா , சத்யராஜ், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’.

by admin
May 16, 2022

Recent News

‘பவுடர்’ படத்தின் ‘ரத்த தெறி தெறி’  பாடல் ஜூன்  வெளீயீடு!

‘பவுடர்’ படத்தின் ‘ரத்த தெறி தெறி’  பாடல் ஜூன்  வெளீயீடு!

May 16, 2022
“நெஞ்சுக்கு நீதி” படக்குழுவினருக்கு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“நெஞ்சுக்கு நீதி” படக்குழுவினருக்கு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

May 16, 2022
நடிகர் பிளாக் பாண்டியின் மனிதநேய முயற்சிக்கு துணை நிற்கும் சமுத்திரக்கனி!

நடிகர் பிளாக் பாண்டியின் மனிதநேய முயற்சிக்கு துணை நிற்கும் சமுத்திரக்கனி!

May 16, 2022
பாரதிராஜா , சத்யராஜ், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’.

பாரதிராஜா , சத்யராஜ், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’.

May 16, 2022

Actress

Sanchita Shetty Latest Stills

Sanchita Shetty Latest Stills

June 13, 2021
கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

April 5, 2021
Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?