சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்ந்து படம் பண்ணுகிறவர்களுக்கு பல வித அனுபவங்கள் இருக்கும். ‘காலா’ பட ஒளிப்பதிவாளர் முரளிக்கும் நிறைய அனுபவங்கள். ஆனாலும் ஆள் அடக்கித்தான் வாசிக்கிறார்.
” தாராவி என்பது சேரி மாதிரிதான்..2016-ல் ஒலிம்பிக் நடந்ததே ரியோ. அதுவும் தாராவி மாதிரிதான்.உலகத்தின் இரண்டு மிகப்பெரிய ஸ்லம்ஸ் இந்த இரண்டும்தான். பொதுவாக நகர்ப்புரமாக்குதல், உலகமயமாக்கல் என்பதால் இந்த சேரி மக்களுக்கு என்ன பயன்? இங்கு நடக்கிற நில மோசடிகள். அரசியல்கள் பற்றி ‘காலா’வில் இயக்குநர் ரஞ்சித் துணிந்து உண்மைகளை சொல்லி இருக்கிறார்” என்கிறார் முரளி.
நமக்கெல்லாம் தொடர்ச்சியாக படம் பண்ணினால் ஒரு வித சலிப்பு வந்து விடும்.ஆனால் நூத்தி அறுபது படங்களுக்கும் அதிகமாக நடித்த ரஜினிசார் ஒவ்வொரு நாளும் செட்டுக்கு வரும்போது புது ஆளா வருகிறார். எப்படி?
லென்ஸ் வழியாக பார்க்கிற ரஜினிசாரை விட வெளியில் பார்க்கிற ரஜினிசார் சிறப்பு. அதே வேகம்,எனர்ஜி, கொஞ்சம் கூட குறையல. காலா படத்தில் இன்னொரு சிறப்பு நானா படேகர்.ரஜினி சாருக்கு சமமா நடிக்கிறார். சார் சொன்ன மாதிரியே நீலாம்பரி,ஆண்டனி, மாதிரி காலா படத்தின் ஹரி நாத்.மிரட்டல் “என்கிறார் முரளி.