ஊருக்கெல்லாம் அளந்து பார்த்து தலை எழுத்தை எழுதிய பிரம்மன் தரகாசுரனுக்கு மட்டும் தாராளமாக எழுதிவைக்க அவன் ஆடிய ஆட்டத்தால் தேவலோகமே திணறிப்போனது. இந்திரனுக்கே குறி பார்த்துவிட்டான் வல்லரக்கன்.
அதைப்போல ஹிப்ஹாப் ஆதியின் கையில் ஆக்கி மட்டையைக் கொடுத்து ஆடச்சொன்னார் இயக்குநர் பார்த்திபன். இவர் ரா.பார்த்திபன் அல்லர் என்பது பி.கு.
மட்டையை எடுத்த ஆதி பந்தை அடிக்காமல் மண்டைக்கு குறி வைத்தால் எப்படி?
அதுவும் இயக்குநரின் தலைக்கே! தாங்குவாரா?
ஓடினார் தயாரிப்பாளர் சுந்தர்.சி.யிடம்!
“ஐயனே, அடியேன் சற்று சுதந்திரம் கொடுத்தேன்.டயலாக் மாற்றினார். அடுத்து எனக்கே ஐடியா சப்ளை பண்ணுகிறார். எனது ஆசனத்தில் பெரும்பாலும் அவரே அமர்ந்து விடுகிறார்.என் செய்வேன் சுந்தரா?” என்று முறையிட அவரோ “சாந்தம் கொள்வாய் பார்த்திபா. கடி பட்டுவிட்டாய்.நல்ல வேளை நச்சு வேலை செய்யவில்லை.என்ன பண்ணுவது. இடம் பறிபோகாமல் பார்த்துக்கொள்!”என்று சொல்லி விட்டு நந்தினி பக்கம் சென்றுவிட்டார்.
என்ன பண்ணுவது பச்சைப்பாம்பு என பார்த்தால் அது அனகோண்டாவாக இருந்து விட்டது.