இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய்யின் புதிய படத்துக்குத் தலைப்பு அறிவிக்கப்படப் இருக்கிறது. இப்படத்திற்கு ‘அதிகாரம்’படைத்த பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இப் படமும் தீபாவளி ரிலீஸ்.
அடுத்து யாருக்கு படம் பண்ணுவார் என்கிற எதிர்பார்ப்பு கோலிவுட்டிலும், ஆர்வம் ரசிகர்களிடமும் எக்கச்சக்கம். ‘பிளாப்’ ஆட்களிடம் மாட்டிக்கொள்ளக்கூடாதே என்கிற கவலைதான் அதற்கு காரணம்,!
ஆனால் விஜய் எப்பேர்ப்பட்ட ஆள்?
இவரிடம் ஏற்கனவே ஒன் லைன் சொல்லிய அட்லி அதை பக்காவாக டெவலப் பண்ணியும் வைத்திருக்கிறாராம்.
ஆனால் தளபதி சைடில் இருந்து இன்னமும் எஸ் என்கிற சம்மதம் வரவில்லை.
இதற்கிடையில் பா.ரஞ்சித் ஒரு கதை சொன்னதாக சொல்கிறார்கள். இவரைப்போலவே ‘தீரன் அதிகாரம் ஒன்று” இயக்குநர் வினோத் ஒரு கதை சொன்னதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
இந்த மூவரில் யாருக்கு சீட்டு கிடைக்குமோ தெரியவில்லை.
தளபதியின் மனதில் யாரோ?