பிரிக்க முடியாதது எது என்றால் சங்கமும் சண்டையும்தான் போல ! தென்னிந்திய நடிகர் சங்கத்தைப் போலவே கேரளத்தின் நடிகர் சங்கத்திலும் ( அம்மா.) சண்டை ஆரம்பமாகி இருக்கிறது.
நடிகை மீதான பாலியல் கொடுமைத் தொடர்பாக கைதாகி ஜாமீனில் வெளியில் இருப்பவர் திலிப். இன்னசன்ட் தலைவராக இருந்த போது நடிகர் சங்கம் திலீப்பை சஸ்பென்ட் பண்ணி இருந்தது. தற்போதைய தலைவர் மோகன்லால் பதவிக்கு வந்ததும் திலீப்பை மறுபடியும் சங்கத்தில் இணைத்து கொண்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நான்கு முன்னணி நடிகைகள் சங்கத்தை விட்டு விலகி இருக்கிறார்கள்.3 நடிகைகள் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன்,ரீமா கல்லிங்கல் ஆகிய மூவரும் வெளியேறியவர்களில் முக்கியமானவர்கள்.
“திலீப் மீதான வழக்கு இன்னமும் முடியவில்லை.அவர் குற்றமற்றவர் என்கிற முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே எப்படி சங்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்” என்பதாக கேட்கிறார்கள்.
இவை போதாது என்று இளைஞர் காங் கட்சியும் மோகன்லாலை கண்டித்து அவரின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
“நீங்கள் மட்டும் போராட்டம்னு வாங்க.அப்புறம் தெரியும் எங்க சேதி.விளைவுகள் கடுமையாக இருக்கும் “என்று மோகன்லால் ரசிகர் மன்றம் எச்சரித்திருக்கிறது.
விடாது கருப்பு!