‘காலா’ வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இருக்கும் ஆதரவினால் அந்த படத்திற்கு ‘கோல்டன் ஹார்வெஸ்ட்’ கிடைத்திருக்க வேண்டும்.
கிடைக்காமல் போனது ஏன்?
பயம் வந்திருக்கிறது டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்க்கு!
காலா படத்துக்கு பிரமாதமான எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு ஏன் பொய்யாகிப் போனது?
ரஜினிதான் காரணம்.!
“தூத்துக்குடிக்கு சென்று வந்த மனிதர் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளை கொட்டியதுடன் நில்லாமல் நாடு சுடுகாடாகி விடும் என்று சொன்னதை மக்கள் ஏற்கவில்லை. ரசிகனும் ரசிக்கவில்லை .குறிப்பாக தமிழீழ உணர்வு இன்னும் மழுங்கிப் போகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற வெளிநாட்டுத் தமிழர்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது. இதனால் அவர்களுக்கு ‘காலா’வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. ஊற்றி மூடி விட்டார்கள்.
அவர்களைப் போலத்தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கும் சூப்பர் ஸ்டாரின் பேச்சு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. எந்த ஒரு பிரச்னை என்றாலும் போராடுகிற நிலைமைதான் இன்றும் இருக்கிறது. இந்த நிலையில் “போராட்டம்னு போராடிக்கிட்டே இருந்தா நாடு சுடுகாடாகிடும்” என்கிற ரஜினியின் பேச்சு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. மக்கள் பிளாப் கொடுத்து விட்டார்கள்.
அந்த நிலை தனது படத்துக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சுப்புராஜ் ஒரு கோரிக்கையை வலுவாக ரஜினிக்கு வைத்திருக்கிறார்.
“தயவு செய்து எதுவும் பேசாதீர்கள்.”