ஆந்திர நடிகர் சங்கத்திலிருந்து விரட்டப்பட்ட ஸ்ரீ ரெட்டி அம்மணப் போராட்டம் நடத்தியும் சங்கம் சேர்க்க மறுத்து விட்டது. அதன்பிறகு பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி விட்டு வாய்ப்புகள் வழங்கவில்லை என பலர் மீது குற்றம் சாட்டினார். ஆந்திரத்து பட்டியல் முடிந்ததும் தமிழ்நாட்டுப் பக்கமாக வந்து புதுக்கணக்கை ஆரம்பித்திருக்கிறார்,
“இப்படியெல்லாம் சொல்வதை நிறுத்தி விட்டு ஆதாரப்பூர்வமாக போலீசில் புகார் செய்து நீதியை தேடிக்கொள் “என்று நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி கூறியதை ஸ்ரீ ரெட்டி ஏற்கவில்லை. மாறாக தன்னைப் புண் படுத்திவிட்டதாக சொல்லி இருக்கிறார். மேலும் நடிகர் சங்கத்தை பயமுறுத்தி இருக்கிறார்.
“ஸ்மூத்தாக போகவில்லை என்றால் நடிகர் சங்கத்தினர் வருத்தப்பட வேண்டியதாக இருக்கும் .என்னுடைய வலியை உணர வைப்பேன்”என்பதாக சொல்லி இருக்கிறார்.