உண்மையிலேயே நலிந்தவர்கள் என்றால் நாடக நடிகர்களும் தெருக்கூத்துக் கலைஞர்களும்தான்! சென்னையில் எப்பவாவது மழைபெய்வது மாதிரிதான் அவர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட மாதம் மட்டுமே செழிப்பு.மற்ற மாதங்களில் பிழைப்புத் தேடவேண்டும் .இதை மனதில் வைத்துக் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கோவை சரளா, பசுபதி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரை நேரில் சந்தித்து நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அரசாணை வெளியிட்டதற்கும், அரசு பொருட்காட்சிகளில் அரசின் கொள்கைகளை விளக்கும் நாடக குழுக்களுக்கு வழங்கி வரும் சன்மானதொகை ருபாய் 2௦௦௦-யில் இருந்து ருபாய் 5௦௦௦-ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தமைக்கும் நன்றி தெரிவித்தனர்
பொருட்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது நாடகக் குழுக்களுக்கு குறைந்தது 10 நபர்கள் நாடகத்திற்கு சென்றால் மட்டுமே அரசுப்பேருந்தில் பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதை, அதற்கும் குறைவானவர்கள் சென்றாலும் கூட இது பொருந்தும் என்று மாற்றி அரசாணை வெளியிடவேண்டும்என்று கேட்டுக்கொண்டனர்.அரசு மூலம் வழங்கும் சன்மானத் தொகையை நாடக கலைஞர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தவேண்டும்
நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த பேருந்தில் செல்லும்போது அவர்களுடைய இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான உடைமைகளை அரசுப்பேருந்தில் எடுத்துச்செல்ல முன்னுரிமை வழங்க வேண்டும் அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த செல்லுவதற்கு அரசு பேருந்தில் வருடாந்திர இலவச பயண சலுகை வழங்குமாறும்.
தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் நூறாண்டு கடந்த தமிழ் திரைப்பட கலைஞர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு திட்டமாக மாதந்திர ஓய்வூதிய தொகை வழங்கிட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த சந்திப்பின் பொழுது முதல்வரிடம் முன்வைத்தனர், முதல்வர் அவர்களும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்,