“வாங்க, கடவுளைத் தேடுவோம்”
வித்தியாசமான டைட்டிலா இருக்குல்ல ….இருக்கும் கண்டிப்பா இருக்கும்! இயக்குநர் சிகரம் அமரர் கே.பாலசந்தரின் கை வண்ணம் ஆச்சே! ஆள்தான் அமரர் ஆகிட்டாரே! டைட்டிலை லாவிடுவோம்னு யாரும் சுட்டுறாதிங்க!
அந்த கதை பக்காவாக அவரது மகள் வசம் மாட்டியிருக்கு! அந்த கதையை படமாக்கலாம்னு கே.பி.யின் பிரதான சீடரான சமுத்திரக்கனி நினைத்து அதற்கான வேலைகளில் இறங்கியபோது வேறு வகையில் முட்டுக்கட்டை வந்துவிட்டது. தன்னையும் ஒரு பார்ட்னராக்கினால் மட்டுமே அது சாத்தியம் என புஷ்பா கந்தசாமி தரப்பில் நெருக்கடி வந்ததாம். இதனால் சமுத்திரக்கனி ஒதுங்கிவிட்டதாக தெரிகிறது.