சர்வதேச அளவில் உலகில் உள்ள பிரபலங்கள் மக்கள் செல்வாக்கு உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள்உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு லண்டனில் உள்ள, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் வைக்கப்படுவது வழக்கம்.இது சர்வதேச அளவில் அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.தற்போது, தீபிகாவுக்கு அந்த கவுரவம் கிடைத்துள்ளது. லண்டன் அருங்காட்சியகத்தில் தீபிகாவுக்கு மெழுகுச் சிலை வைப்பதற்காக, அருங்காட்சியக நிர்வாகிகள், அவரை அளவெடுத்துச் சென்றுள்ளனர் . மெழுகுச் சிலைக்கு போஸ் கொடுப்பதற்காக, வெள்ளைச் சட்டையும், கறுப்பு நிற லெதர் பேன்ட்டும் அணிந்திருந்தார்,முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இதுகுறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதீபிகா , லண்டன் மற்றும் டெல்லியிலுள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தனது மெழுகுச்சிலை அடுத்த வருடம் நிறுவப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.