கவிஞர் சினேகன் ஒரு காட்டாறு. சில இடங்களில் அமைதியாக இருப்பார். சில இடங்களில் சற்றே சினம். இனமானத்துக்கு இழிவு என்றால் கரை உடையும்.!!
அண்மையில் உலகத்தமிழர்களின் போராளித் தலைவர் பிரபாகரனின் மகனைப் பற்றிய ஒரு படம் தனியாகத் திரையிட்டுக் காட்டப் பட்டது. படத்தின் தலைப்பு “சாட்சிகள் சொர்க்கத்தில்!”
பத்திரிகையாளர்கள் முன்பாக பேசிய சினேகன் பொங்கிவிட்டார்.
“100,500 கோடிகள் என செலவு செய்யப்படுகிற படங்கள் ஈழத்தமிழர்களின் பணத்தில்தானே எடுக்கப்படுகின்றன, இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தந்தால் வாயை மூடிக்கொண்டு ஈழத்தமிழர்களின் வலியைப் பற்றி நடிப்பார்கள் .இவர்களுக்கு மானம் முக்கியம் இல்லை.பணம்தான் முக்கியம்!” என்றார்.
யாரைச்சொல்கிறீர்கள் கவிஞரே?