உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி கோலிவுட் புலிகளிடம் கருத்துக் கேட்டால் “வரட்டும் பார்க்கலாம்” “வரவேற்கிறேன்” என்று பொதுவாக சொல்லிவிட்டு பதுங்கி விடுவார்கள். “எதுக்கு கருத்துச் சொல்லி கெட்டபெயர் வாங்கனும்” என்பதுதான் அவர்களின் பதுங்கலுக்குக் காரணமாக இருக்கும்!
ஆனால் தொலைக்காட்சியில் பணியாற்றியதாலோ என்னவோ பிரியா பவானி சங்கருக்கு சற்று தைரியம்தான்! கடைக்குட்டி சிங்கம் கொடுத்திருக்கும் சூப்பர் ஹிட் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
“நமக்கு அரசியல் தொடர்பு இல்லேன்னு சொல்ல முடியாது. இருக்கு,!பேஸ் புக்கை பார்த்தாலே நாம் பேசுறது அரசியல்தான் என்பது புரியும். கமல்,ரஜினி இருவரையுமே பிடிக்கும் .கட்சியின் பெயரைக்கூட கமல் அறிவித்து விட்டார்.அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் அவர்களை நம்ப வேண்டும் என்பதில்லை!அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரம் ஓடுகிற படம் இல்லை.அவர்கள் ஜெயித்து அமைக்கப்போகிறவர்கள்.எனவே இந்த விஷயத்தில் சாதாரண குடிமகளாக சொல்கிறேன்.!” என்கிறார்.