இல்லாத ஒன்றுக்குத்தான் மனிதன் பயப்படுவதும், சிரிப்பதும்! அது சாட்சாத் திருவாளர்,அல்லது திருவாட்டி பேய்தான்! சினிமாக்காரர்களுக்கு துட்டு அள்ளிக் கொடுப்பதும் பேய்தான்!
அதை சரியாக பயன்படுத்துவதில்தான் வருமானம். இல்லையேல் ‘அடி’ தானம்.
பகுமானமாய் ஒரு படம் தயாரித்து வருகிறார் நோபல் மூவீஸ் கலைமாமணி.
என்ன சொல்கிறார் ‘டாணா’ பற்றி?
“இயக்குநர் யுவராஜ் சுப்பிரமணி சொன்ன கதை எனக்குப் பிடிச்சுப் போச்சு. சத்தியமா சொல்றேன். பயந்துட்டேதான் கதையை கேட்டேன். புது அனுபவமா இருந்தது, சரி நாமே தயாரிக்கலாம்னு எறங்கிட்டேன். பேய் பட ஹீரோ வைபவ், யோகிபாபு ,நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன் இன்னும் பலர் படத்தில் இருக்கிறாங்க “என்றார் தயாரிப்பாளர்.கலைமாமணி.