சண்டக்கோழி இசை விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியது :-
லிங்குசாமி சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.இந்த கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன் மீராஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும் சண்டைகோழி முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று.
அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் இருந்தது அந்த கதாபாத்திரம்பற்றி கேட்ட பின் அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது.
மகாநதி படப்பிடிப்பின் போதும் இந்த படம் தான் எனக்கு பெரிய ரிலாக்ஷாக இருந்தது.விஷால்,லிங்குசாமி அவர்களுடன் படப்பிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது.மகாநதிக்கு பின் நான் விரும்பி நடித்த படம் சண்டைகோழி-2 தான்.பிருந்தா சார் ஒவ்வொரு வசனத்தையும் அதற்கேற்றவாறு எனக்கு சொல்லிகொடுத்தார்.
.விஷால் எனக்கு இந்த படத்தின் மூலம் நண்பர் கிடைத்துள்ளார் அவருக்கும் நன்றி என்றார் -கீர்த்தி சுரேஷ்