தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அனைத்து நிர்வாகிகளும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘‘திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில் தொழிலாளர் சம்மேளனம் எந்த முன் அறிவிப்பும் இன்றி தனிச்சையாக புதிய ஊதிய உயர்வினை அறிவித்துள்ளனர். இது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சியாகவும் மன உளச்சலையும் தந்துள்ளது. இதனால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களும், தற்போது படப்பிடிப்பு நடந்துவரும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற காரணங்களை கருத்தில் கொண்டும், நசிந்து கிடக்கும் சினிமா தயாரிப்பு தொழிலின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டும் வருகிற 27-7-2015 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் பேச்சுவார்த்தை முடியும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மற்ற விவரங்களை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அங்கத்தினர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.