படங்களை திரையிடுவதில் ஒழுங்கு முறை இருக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு கமிட்டியை நியமித்தது. இந்த கமிட்டி சிபாரிசு செய்கிற படங்கள்தான் அந்தந்த வாரம் அல்லது மாதங்களில் வெளியாக வேண்டும்.ஆனால் அப்படி நடக்கிறதா?
சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் வாரத்தில் திடீர் என பெரிய பட்ஜெட் படங்களை கொண்டுவந்து விடுகிறார்கள்.
சிறிய தயாரிப்பாளர்கள்தான் இதில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒழுங்குபடுத்தும் கமிட்டியின் விதிகளை மீறி விஜய் ஆண்டனி அவரது படத்தை ரிலீஸ் செய்ததால் அவருக்கு பெப்சி ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை தனுஷுக்கு ஏற்படுமா?
ஜனவரியில் வரவேண்டிய மாரி 2 வை டிசம்பரில் கொண்டு வருகிறார்.
இது ஒழுங்குபடுத்தும் குழுவின் விதிகளுக்கு முரணானது.
தனுஷ் மீறலாமா? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் என்பதால் சங்கம் நடவடிக்கை எடுக்காதா என சிலர் பிரச்னையை கிளப்பவே ஒரு பஞ்சாயத்து கூடி பேசி இருக்கிறது .முடிவு என்ன என்பது தெரியவில்லை.
ஆனால் தனுஷின் ராஜ தந்திர வேலை என்பதாக சிலர் சொல்கிறார்கள்.டிசம்பர் 21 ம்தேதி வெளியாகும் தனது மாரி2 படத்தின் தியேட்டர்களை ஜனவரியில் வருகிற பேட்ட படத்துக்கு கொடுத்து விடுவார் ,அதற்காகவே டிசம்பரில் வருகிறார் என்கிறார்கள்.இதனால் விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் செய்து விடலாம் என்பது அவரது நோக்கம் என்கிறார்கள்.
ஆனால் இப்படியெல்லமா நடக்கும்?. விஷாலுக்கும் தனுசுக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்பதை வைத்து இப்படிப்பட்ட செய்திகள் வருகிறதோ என்னவோ?