![]() ![]() |
|||
|
மாடலிங் உலகிலிருந்து திரையுலகிற்கு வந்துவிட்டாலும் இன்னமும் மாடலிங் உலகின் முக்கிய நிகழ்வுகளுக்காக உலகம் முழுக்க பறந்துகொண்டிருக்கிறார் மீரா.
வெகு செலக்டிவ்வாக அதேசமயம் சேலஞ்சிங் ரோலுக்காக காத்திருந்தவர் “போதை ஏறி புத்தி மாறி” படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்துவருகிறார்.
போதை ஏறி புத்தி மாறின்னு டைட்டிலைக் கேட்டவுடன் குடி குடியைக் கெடுக்கும்னு அட்வைஸ் பண்ணப்போற படம்னு நினைச்சா அதுவல்லவாம் இது…
பின்ன?
த்ரில்லர் வகைப் படம்.
தலைப்புக்கு சம்பந்தத்தை கிளைமாக்ஸில் மட்டுமே பார்க்க முடியும்.
“இயக்குநர் கே ஆர் சந்துரு குறும்பட இயக்குநர். கதை சொன்ன உடனே இந்த ரோலை செய்துவிடவேண்டும்னு தோணுச்சு. படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கேரக்டரும் முக்கியமான வேலையை செய்யக்கூடிய கதை.
கவிதை மாதிரி ஒளியைக் கையாள்பவர் பாலசுப்ரமண்யெம் சார். சிறப்பா வந்திருக்கு படம்.
இன்னும் முக்கிய மூன்று படங்களின் பேச்சு வார்த்தையில் இருக்கிறேன். கதைக்காக மொட்டை போடச் சொன்னால் கூட போடுவேன்.
நான் தேசிய விருது வாங்கவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அவர் இப்போது இல்லை. ஆனால் அதை நனவாக்குவேன். அப்படியொரு கதை கிடைக்கும்பட்சத்தில் காசே வாங்காமல் கூட நடிப்பேன் என்கிறார் மீரா.
தமிழ்ப் பெண்கள் கிளாமர் என்றாலே காத தூரம் ஓடுவார்களே எனக் கொக்கினால்.. மாடலிங் உலகில் இல்லாத கிளாமரா… அங்கிருந்து வந்ததால்… அதன் எல்லை தெரியும். கிளாமர்னு கேட்ட உடனே ஓடமாட்டேன். கதையின் முக்கியத்துவத்தைப் பொருத்து கண்களைப் பறிக்கலாம் என்கிறார் இந்த சென்னைக் கிளி!
அப்படியா பார்த்தும்மா.!