புதிய இயக்குனர் அருண் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ், துளசி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வர்த்தகரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத்துடன் நின்று விடாமல் திக்கெட்டும் சென்று பல விருதகளையும் அள்ளி வருகிறது.
ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என பல நாடுகளின் திரைப்படவிழாக்களை பார்த்த ‘பண்ணையாரும் பத்மினியும்’. இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களுக்கான வரிசையில் சிறந்த திரைப்படம் என்ற விருது வாங்கியது. அதே சமயம் இந்த வருடம் கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து இப்படத்தின் இயக்குனர் அருண் கூறுகையில் “ இவ்வகையான விருதுகள் எங்களை போல் உள்ள வளரும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாய் அமைகிறது.” என்கிறார்.இப்படம் வரவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது.