
மிஸ்டர் லோக்கல் !
திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இன்று சிறப்பாக நடந்தேறின. நடிகர் ரோபோ சங்கர் பத்திரிகையாளர்களிடம் மாட்டிக்கொண்டது தனிக்கதை.!
எப்பவும் போல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனம் விட்டுப் பேசினார்.
“எப்பேர்ப்பட்ட சூழலில் நான் இருந்தேன் என்பதை உணர்ந்து என்னை கை கொடுத்துத் தூக்கி விட்டவர் சிவா தான் (சிவகார்த்திகேயன்.) இதை என்னால் மறக்கவே முடியாது” என நெகிழ்ந்து சொன்னார் .
சிவகார்த்திகேயன் பேச வந்தபோது “எத்தனையோ தயாரிப்பாளர்கள் சொல்லாமல் மறைத்ததை ஞானவேல்ராஜா மறக்காமல் சொல்லியிருக்கிறார். இதற்காக அவருக்கு மிகவும் நன்றி “என மகிழ்ச்சியுடன் சொன்னார். இது விழாவில் ஒரு ஹைலைட்டாக இருந்தது.
இந்த படத்தின் வெளியீட்டாளர் சக்திவேலன் பேசுகையில் “இந்த படம் சம்மருக்கு ஏற்ற பொழுதுபோக்குப் படம் “என்றார்.
இந்த படத்தில் நடித்த ரோபோ சங்கர் பேச வந்தபோது செய்தியாளர்கள்.கை தட்டாமல்,சிரிக்காமல் ஒரே மோடில் இருப்பதாக சொன்னதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பு.
“இது பத்திரிகையாளர்கள் சந்திப்பு. இங்கே எப்படி கைதட்டலை எதிர்பார்க்கலாம்.ரசிகர்கள் கூட்டம் இல்லை உங்களுக்கு கை தட்டுவதற்கு” என நாலாபக்கமும் எதிர்ப்பு வரவே படக்கென பேச்சை முடித்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.
தொகுப்பாளரும் நிருபர்களைப்பார்த்து கை தட்ட சொல்லவே நாளிதழ் நிருபருக்கு வந்ததே கோபம். அவரும் ஒரு பிடி பிடிக்க தொகுப்பாளரும் மன்னிப்பு கேட்டார்.












