நாகமாக சீறிக்கொண்டு இருந்த மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனை சீண்டியே ராஜ நாகமாக மாற்றி விட்டனர். காந்தியாருக்கு சாரும் சம்பந்தப்படாத அதிமுக அணி வாலண்டியராக வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டு வடிவேலு ஸ்டைலில் நானும்ரவுடிதான் என்று கூப்பாடு போடுவது மாதிரி மந்திரிகள் வாயைத்திறந்து வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கமல்ஹாசன் டிவிட்டரில் காரமாகவே பதிவிட்டிருக்கிறார்.
கோவை மாவட்டம் சூலூரில் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் கூறி இருப்பதாவது :
“சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.
மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.
12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம்.
ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.
நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை…
நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.
நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.
புரியலன்ற சோமாரிகளுக்கு….
“ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.
“கோடி”ன்ன உடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! “தமிழா” நீ தலைவனாக வேண்டும். இதுவே எனது
வேண்டுகோள்.” என குறிப்பிட்டிருக்கிறார்.