நாயைக்கூட மனுஷன் விட்டு வைக்கல. மாடுன்னாலும் பரவாயில்ல என்கிற ரேஞ்சுக்கு அவனின் காமரசனை ஓங்கி இருக்கு.
பாஜக ஆட்சியில் பாலியல் ரீதியான வன் கொடுமைகள் அதிகம் ஆனதற்கு காரணமே அரசியல் ரீதியான அணுகுதல்தான்!
அனேகமாக பொள்ளாச்சி காமுகர்கள் விடுதலை ஆகி விடுவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அரசியல் வெற்றி கொடுத்திருக்கிற தைரியம்.
படத்தில் பார்த்த மனிதரை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கா?
தமிழ்ப்படமான இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமான பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் கஷ்யப்தான் அவர்,
இந்திய பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு அவர் செய்தி அனுப்பி இருக்கிறார்.
அவரது மகளுக்கு பாலியல் ரீதியான பயமுறுத்தல் பகிரங்கமாகவே பாஜக தொண்டர்களால் விடப்பட்டிருக்கிறது.அதற்காகத்தான் யோசனை கேட்டிருக்கிறார்.கிண்டலாகத்தான் தெரியும்.ஆனால் உரத்த குரலில் கேட்டால் அவருக்கும் அல்லவா ஆபத்து!
“அன்புள்ள மோடி சார்.! உங்களின் வெற்றிக்கு வாழ்த்துகள், எனது மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டுகிற உங்களின் தொண்டர்களை நான் எப்படி கையாள வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும் ” என்பதாக டிவீட் பண்ணி இருக்கிறார்.
Dear @narendramodi sir. Congratulations on your victory and thank you for the message of inclusiveness. Sir please also tell us how do we deal with these followers of yours who celebrate your victory by threatening my daughter with messages like this for me being your dissenter.
