இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.
சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது.எல்லோரும்இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்தபயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு‘.
‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகியபடங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன்.
நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார் டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில்நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .
காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜாபட்டாச்சார்ஜி .’பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமானவர்.
மனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் எனப் புகுந்துவிளையாடியிருக்கிறார் அரோல் கொரேலி.
நேர்த்தியான படத்தொகுப்பைச் செய்திருப்பவர், அருண் குமார்
திரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள்பணியாற்றிய மாலா மணியன் தனது ஃபர்ஸ்ட் காப்பிபுரொடக்ஷன்ஸ் மூலம், ‘சிறகு’, தயாரித்துள்ளார்.
கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தைஇயக்கியிருக்கிறார் .