அக்கினி வெயில் குறைந்து சில மாவட்டங்களில் மழையும் பெய்கிறது
ஆனால் சென்னையில் மட்டும் மழை பெய்யாது !
எப்படிங்க பெய்யும்.!
நடிகர் சங்கத் தேர்தலில் அனல் அடிக்க ஆரம்பித்திருக்கிறதே!
தேர்தலோடு சவுகிதாரை மோடி கழட்டிப் போட்டு விட்டார். அவர் கழட்டி வீசியதை பாக்யராஜ் எடுத்து மாட்டிக் கொண்டுவிட்டார் .”சவுக்கிதாராக களம் இறங்கி இருக்கிறோம்” என்றிருக்கிறார் பாக்யராஜ்.
பாண்டவர் அணியில்முன்னாள் தலைவர் நாசர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்..இவரை வழி மொழிந்து வாழ்த்தியிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
நாசருக்கு மோடி எதிர்ப்பு அணியை சேர்ந்த கமல் ஆதரவு என்பதால் பாக்யராஜ் மோடி ஆதரவுஅணியான சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து ஆதரவு கேட்டிருக்கிறார்.
“நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் “என்று ரஜினி சொன்னதாக பாக்யராஜே சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது..
ஆக பாண்டவர் அணியில் போட்டியிடும் நாசருக்கும் அவரது அணிக்கும் ரஜினி எதிர்த்து செயல்படுவார் என்பது தெரிகிறது.
. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

” இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்தோம்

” தேர்தலில் அரசியல் தலையீடு இருக்கிறதா ?”
“அரசியல் தலையீடு என்பது அறவே கிடையாது. இன்றைய சூழலில் அரசுக்கு இதைவிட பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது.அதை கவனிக்க வேண்டியவர்கள் அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சிறு அமைப்பில் குறுக்கிடுவார்கள் என்பது அவர்கள் மீது வைக்கும் தப்பான விஷயம்.
அரசு அல்லது கட்சிகளின் தலையீடு சுத்தமாக கிடையாது. தனிப்பட்ட முறையிலும் சரி பொதுவாகவும் சரி நான் எப்போதும் நம்புவதும் சரி இந்த அமைப்பு எந்த ஒரு பாகுப்பாடுமின்றி செயல்படும் .
மத பாகுபாடோ அல்லது அரசியல் பாகுபாடோ , எந்த ஒரு பாகுப்பாடும் இல்லை. நடிப்பு, நடிகர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்வு முறை இதற்கு தான் முன்னுரிமை.
அரசியல் குறுக்கீடு இருந்திருந்தால் தலைவர் என்ற முறையில் முதல் குறுக்கீடு எனக்கு தான் வந்திருக்க வேண்டும். என்னிடம் யாரும் அப்படி பேசவில்லை.” என்றார்.