திமுகவை உடைத்து ,அண்ணா திமுகவை அமரர் எம்.ஜி.ஆர் .தொடங்கியதற்கு வேறு பல காரணம் இருந்தாலும் வெளியில் சொல்லப்பட்டது ‘கணக்கு காட்டவில்லை!’ என்பதுதான்.!
அதைப்போல ‘ஈகோ கிளாஸ்’ என ஐசரி-விஷால் மோதலுக்கு காரணம் சொன்னாலும் உண்மை என்னவோ ‘மலேசியா’ என்கிறார்கள்.
மலேசியாவில் நடந்த திரைப்படநிகழ்ச்சிக்கு ஏசி.சண்முகம் அழைக்கப்பட்டிருந்தார். இவர் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறவர். இவரும் திராவிட இயக்கம் சார்ந்தவர்தான்.!
இது ஐசரி கணேஷை பாதித்திருக்கிறது, நடிகர் சங்கத்தைப் பொருத்தவரை பலவிதமான நன்கொடைகளை பெருமளவில் வழங்கி வருகிறவர் ஐசரிதான்.எங்கே தனது செல்வாக்கினை ஏசி சண்முகம் குறைத்து விடுவாரோ என்கிற அச்சம் வந்தது பிளவுக்கு அடிக்காரணமாக இருந்து விட்டது.
நடிகர் சங்கத்தில் மற்ற எல்லோரும் குட் புக்கில் இருந்து வருகிறபோது விஷாலின் நடவடிக்கைகள் அவரைத் தனித்துக்காட்ட ஆரம்பித்திருக்கின்றன.
அவர் பதினெட்டு கூட்டங்களுக்கு வரவில்லை என்பதாக சொல்கிறார்கள்.
போன் அழைப்புகளை அவர் பொருட்படுத்துவதுமில்லை.
இதனால்தான் விஷால் மீது பெரும்பாலோர் காட்டமாக இருக்கிறார்கள்.
ஆளும்கட்சியான அதிமுகவை விஷால் பகைத்துக் கொண்டது இந்த தேர்தல் நேரத்தில் அவருக்கு வினையாகிவிட்டது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ -ஐசரி கணேஷ் கூட்டணி வரவிருக்கிற நடிகர் சங்கத் தேர்தலில் பல திருப்பங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.