இப்பத்தான் ஒரு வழியா நடிகர் சங்கத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது,
பொதுவாக எதிர்க்கட்சிகள் சொல்வதைப்போல பாக்யராஜ் “ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாக” சொல்லி விட்டார். அவரது அணியின் பலம் அவரை விட வேறு யாருக்குத் தெரியப்போகிறது.மனிதர் ரொம்பவே நொந்திருக்கிறார்.
பாக்யராஜை விட பெரிய குண்டாக போட்டிருக்கிறார் ஆனந்தராஜ்.
“கட்டிடம் கட்டி முடிந்து திறக்கப்படுகிறபோது வைக்கப்படுகிற கல்வெட்டில் “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்று மட்டுமே இருக்கணும். இதைவிட்டுட்டு அவர் திறந்தார் இவர் திறந்தார்னு வேற ஏதாவது இருந்தால் நானே கடப்பாறையை எடுத்திட்டு வந்து அடித்து நொறுக்குவேன்” என்பதாக சொல்லியிருக்கிறார்.