நேற்றைய பிக்பாஸ் விடிந்த போது….
தளர்ந்த உள்ளாடைகளும் ,மத்தள ப்ருஷ்டங்களும்….அடே டே.!
ஆடிய ஆட்டமென்ன ‘கத்தாழக் கண்ணாலே குத்தாதே ‘பாட்டுக்கு போட்ட குத்து வரிசை என்ன…அதிலும் திமிசுக்கட்டை மாதிரி இருக்கிற வனிதாவுக்கு ஸ்டெப்ஸ் வரலைங்க.!
சான்டி டான்ஸ் மாஸ்டர் ஆச்சா,,,,சரக்கே இல்லாத கடையில் அவர் மாஸ்டர் கெத்து காட்டணுமா என்ன….ஒரே சரசம்தான்.
அதிகாலைப் பொழுது பிக்பாசில் அமர்க்களமாக நேற்று கழிந்தது.
லீடர்ஷிப் ஆசை பாத்திமா பாபுவுக்கு…!
ஆங்காங்கே தூக்க முடியாத உடம்ப தூக்கிக்கிட்டு அந்த பாட்டி படுத்துன பாடு …எல்லாம் தமாஷாத்தான் இருந்தது.
நம்ம சேரனும் ,சரவணனும் சினிமாவில் பார்க்காத கிளாமரா…என்ன அங்க இவங்க நடிகைகளிடம் குட்டைப்பாவாடை போட்டுட்டு வாங்கன்னு சொல்வாங்க. நடிகைகளும் எதோ பழக்கமில்லாததைப் போல சிணுங்கிக்கொண்டு போட்டுக் கொண்டு வருவார்கள். இடைவெளியில் தாவணிபோல துண்டைப் போர்த்துக் கொள்வார்கள்.
செட்டில் உள்ளவர்கள் பார்க்கக்கூடாதாம். ஆனால் லட்சக்கணக்கானவர்கள் பார்ப்பதற்குத்தான் தன்னை மேலாடை இல்லாமல் ஆட விடுகிறார்கள் என்பது தெரியாமலா இருக்கும்? சும்மா பந்தாவுக்காக!
இங்கேயாரும் சொல்லாமலேயே ஆளுக்காள் சூப்பர் குட்டைப் பாவாடைப் போட்டுக் கொண்டுவந்ததுதான் ஹை லைட்.!
ஹை லைட் என்றதும்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
மோகன் வித்யாவும் இன்னும் சிலரும் சொன்ன உண்மை நிகழ்வுகள் பாறைகளையும் உருக்கிவிடும்..
தனது வாழ்க்கைத் துணைவியாக காது கேளாத வாய் பேசாத உறவுப் பெண்ணை மணந்து கொண்டு வாழ்ந்த வாழ்க்கை, அந்த மாண்புள்ள மனைவியை விபத்தில் பலி கொடுத்ததை மோகன் வைத்யா நெஞ்சம் பிளந்து சொன்னபோது டி.வி. பார்த்தவர்களும் கலங்கித்தான் போயிருப்பார்கள். தனது மகனுக்கும் காது கேளாது,வாய் பேச வராது என்று சொன்னபோது பார்வையாளர்கள் உடைந்தே போயிருப்பார்கள்.
ஆராயாமல் அவசரப்பட்டு காதலித்து கல்யாணம் பண்ணி கணவனிடம் அடி உதை வாங்கி பிள்ளையையும் பறிகொடுத்ததை ரேஷ்மா சொன்னபோது மறுபடியும் கண்ணீர் அலைகள்.
இன்று என்ன காத்திருக்கிறதோ…?