பிக்பாஸில் இன்று களையெடுப்பு பிராசசிங் நடந்தது.
ஆனால் இதெல்லாம் நாடகமா நிஜமா என்பது சனி ஞாயிறு உலகநாயகன் கமல்ஹாசன் வந்து சொன்னபிறகுதான் தெரியும்.
பார்வையாளர்களின் வெறுப்புக்கு அதிகம் ஆளான வனிதாவை அதிகம் பேர் சொல்லவில்லை.ஆகவே அவரை வம்பு வளர்க்கும் அடாவடிப் பேர்வழியாக பிக்பாஸ் அதிக வாரம் வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மதுமிதா,மீரா ஆகிய இருவர்தான் மெஜாரிட்டி கசப்பு பார்ட்டிஸ்..
இவர்களுக்கு அடுத்து சேரன். நடிகர் சரவணனே சர்வாதிகாரியாக நடக்கிறார் என்று சொன்னதுதான் ஆச்சரியம். படம் எடுத்தாலும் வாய்ப்பு தரப்போவதில்லை ஆகவே வெறுப்பை வெளிப்படுத்தி விடுவோமே என்று சேரனை குத்திவிட்டார்.
அடுத்த வெறுப்பாளி பாட்டி பாத்திமா பாபு. மோகன் வைத்தியாவை போடா என்று சொல்லி விட்டாராமே. வைத்யாவே வயிறு எரிந்து சொன்னார், போயும் போயும் அந்த முதியவர் மீதா பாட்டியின் கோபம் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பிரச்னை பற்றிய புரிந்துணர்வு வளர்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில் பிக்பாஸில் பெரும்பாலும் ஆங்கிலம்தான் பேச்சு மொழியாக இருக்கிறது. குறிப்பாக வனிதாவின் ஆக்கிரமிப்பு .தமிழ்ப் பொண்ணு என்று சொல்லுமளவுக்கு அவர் ஆடைகள் அணிவதில்லை.அசிங்கம் ஆபாசம் இரண்டும் கலந்ததுதான் பிக்பாஸ் என்பதை இந்த சீசனிலும் உணர்த்துகிறார்கள்.