சிக்கல்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலின் முடிவுகள் என்று தெரியுமோ ? மாண்பமை நீதி அரசர்களுக்குத் தான் தெரியும்.!
கடந்த ஜூன் 23-ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. பலருக்கு போஸ்டல் வாக்குச்சீட்டுகள் போய்ச்சேரவில்லை புலம்பலுக்கு மத்தியில் தேர்தல் நடந்தது.
கிட்டத்தட்ட மூவாயிரம் வாக்குகள் .ஆனால் பதிவானதோ ஆயிரத்து சில்லறை.
பதிவான வாக்குகளை நுங்கம்பாக்கம் சவுத் இந்தியன் வங்கி கிளை பெட்டகத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த வாக்குகளை என்ன வேண்டும் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிபதி ஆதிகேசவலு, தபால் வாக்குகள் தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவு
தற்போது வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கினை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.