சர்கம் என்கிற அமைப்பு சிங்கப்பூரில் யுவன்சங்கர் ராஜாவின் -உங்கள் முதல் காதல் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை யாருக்கும் சொல்லாமல் அந்த அமைப்பு ஒத்தி வைத்திருக்கிறது. யுவனிடமும் கன்சல்ட் பண்ணவில்லை. காண்டாகிவிட்டார் .ஜூலை 13 ஆம் தேதி நிகழ்ச்சி நடத்துவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்த நிலையில் இந்த ஒத்திவைப்பு தீர்மானம் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தி இருக்கிறது,.
யுவன் விடுத்துள்ள அறிக்கை விவரமாவது:
“இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது.
தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு சொல்ல எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தேதிகள் வீணாகி இருக்கிறது.

இந்த ரத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணத்தை விடவும் நேரம் என்பது மதிப்பு மிக்கது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன்.
இந்த சம்பவம் எனக்கு ஒரு நிகழ்வை நடத்துவதற்கு “சரியான பங்குதாரரை தேர்ந்தெடுப்பது அவசியம்” என்ற பாடத்தை கற்பித்திருக்கிறது. மன்னிப்பு வழங்குவது மட்டுமல்ல, பார்வையாளர்கள் குறிப்பாக எனது ரசிகர்கள் எனது நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அவர்களின் நிபந்தனையற்ற அன்பை இப்பொழுது போலவே, என்றென்றும் தருவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி அதே 13ஆம் தேதி நிகழும் பட்சத்தில் நான் கலந்து கொண்டு, இந்த நிகழ்வை நடத்திக் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.