நாடே கொள்ளை போனாலும் அதில் எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று கேட்கிறவன்தான் இன்றைய அரசியல்வாதி.
நாட்டைப் பற்றியோ,நாட்டு மக்களின் நலன் பற்றியோ ,வருங்காலத்தைப் பற்றியோ ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படுவதில்லை.
காந்தியும் நேருவும் படைத்த கொள்கைகள் இன்று மதவெறியர்களால் புதை குழிக்குப் போகின்றன.
கமிஷன்,குடும்ப அரசியல் என மூழ்கிப் போனவர்கள் ஏழைகளின் எதிர்காலம் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள்?
ஏழைகளைப் பற்றி கவலைப்படுவதாக சொல்கிறவர்கள் நடத்துகிற பள்ளிகளில் ஏழைப்பிள்ளைகளுக்கு இடம் இல்லை. கோடீஸ்வரர்களுக்குத் தான் அங்கு இடம் உண்டு.
இத்தகைய நிலையில் தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசினார்.
உண்மையை உரத்துச்சொன்னார்.,
” மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை,
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக்கொள்கை வரைவில், 3ஆம் வகுப்பு முதல் நுழைவு தேர்வு, கல்வி தேர்வு என தேர்வுகள் வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
சரியான சமமான கல்வி இல்லாமல் எப்படி கல்வி தேர்வுகள் வைக்க முடியும்?
இந்த புதிய கல்விக்கொள்கை என்பது முப்பது கோடி மாணவர்களின் வாழ்க்கை பற்றியது.
ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கின்றனர்,
இதுபோன்று மொழிகளை திணிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் .
ஏனெனில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற கல்விகள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.
60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம்,
அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்?
எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிக்க முடியும், நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரிக்கும்,
தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன,
கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் .
அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பின் பள்ளி கல்லூரிகளின் தேவைகள் இல்லாமல் போய்விடும்.” என புட்டுப் புட்டு வைத்தார்.
.நடிகர் சூர்யாவின் கருத்துக்கு பா.ஜ கவின் தமிழிசை மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில்,சூர்
அந்த அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,
“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள்.
எனவே, கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு.
புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது
தம்பி சூர்யாவுக்கு என் ஆதரவு கண்டிப்பாக உண்டு. “என ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்.
காமராஜரின் கல்விக் கொள்கையத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள்”என சிலர் சொல்லிவருவது பெருந்தலைவருக்கு செய்கிற பச்சைத் துரோகம் ஆகும்.!