சூர்யா நடித்திருக்கிற பிரமாண்டமான காப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்பதற்காக மீடியாக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தன.
சூர்யாவின் புதிய கல்வி கொள்கை குறித்தான பேச்சை மோடியின் ஆதரவாளர் ரஜினி எப்படி எதிர்கொள்வார் என்பதுதான் அதற்கு காரணம்.
அவர் சூர்யாவின் கருத்தையே ஆதரித்தார்.
அவரின் பேச்சு.
கேவி ஆனந்த் திறமையான இயக்குனர் .நான் நடித்த சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கார். அவர் டைரக்ஷன்ல தயாராகியுள்ள இந்த காப்பான் படம் நிச்சயம் வெற்றிபெறும்.
சூர்யாவின் விடாமுயற்சிதான் முன்னேற்றத்துக்கு காரணம். நேருக்கு நேர் படத்தில் அவரது நடிப்பு பேசும்படி இல்லை அதன் பிறகு பாலாவின் நந்தா பிதாமகன் போன்ற படங்களில் சிறந்த நடிகராக தன்னை செதுக்கி உயர்ந்த இடத்துக்கு வந்திருக்கார்.
காக்க காக்க கஜினி அயன் உள்ளிட்ட படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சூர்யாவையும் கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக திரையுலகில் சிவகுமார் வளர்த்திருக்கிறார் இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்காங்க.
சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது .
ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்னு சிலர் பேசிருக்காங்க.
சூர்யா பேசினார் மோடி கேட்பார் அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார் . மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கு .
எனவே அவர் பேசும் கருத்துக்கள் வரவேற்க தகுந்தவை எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் ஒருமுறை இமயமலைக்குச் சென்று இருந்தபோது கங்கையாற்றில் குளித்தேன் அப்போது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சம் மறை கழன்று விழுந்துவிட்டது
இதனால் கவலைப்பட்டேன் எதிரே வந்த அகோரி ஒருவர் என்னை பார்த்து ருத்ராட்ச மாலை உனக்கு வேண்டும் இல்லையா அது கிடைக்கும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்
அதேபோல ஒரு ஆசிரமத்துக்கு சென்றபோது ஒரு பெண் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு எனக்கு ருத்ராட்ச மாலையை கொடுத்தார் இது தான் அகோரிகளின் மகத்துவம் .”என்று ரஜினிகாந்த் பேசினார்
விழாவில் நடிகர்கள் சிவகுமார் மோகன்லால் ஆர்யா இயக்குனர்கள் தங்கர்பச்சான் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி நடிகை சாய்ஷா இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்