“சாப்பாடு கொண்டு வந்தவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன். முஸ்லீம். அதனால சாப்பாட்டைத் திருப்பிக் கொண்டு போ” என்று ‘சோமொட்டோ’ஊழியரைத் திருப்பி அனுப்பி இருக்கிறார் ஒரு ஆள்!
நாடெங்கும் கண்டனக் குரல்.
தற்போது வேறு ஒரு மாதிரியான மத வெறியனை பார்க்க நேர்ந்தது.
நியூஸ் 24 சேனலில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி.
அஜய் கவுதம் என்கிற பிரமுகர் வந்திருந்தார்.இவர் ‘ஹம் ஹிந்து’ அமைப்பை சேர்ந்தவராம்.
தொகுப்பாளர் முஸ்லீம் என்றதும் கண்களை மூடிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
இத்தகைய மத வெறியர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா?
மோடியின் ஆட்சியில்தான் இத்தகைய அவலங்களை பார்க்க முடிகிறது.
மத சார்பற்ற நாடு என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது.