கையில் கட்டுடன் வெளியேற்றப்பட்ட மதுமிதாவுக்கு கண்டனத்துடன் ஆறுதலும் சொல்லி அனுப்பி வைத்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
அவர் தற்கொலைக்கு முயன்ற கதையை இன்று விரிவாகச் சொல்வார்களோ,என்னவோ!
ஆனால் அந்த நிகழ்வுக்கு வில்லங்க நோட்டீஸ் விட்டிருக்கிறார் ஒதுக்கப்பட்டிருக்கும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.
போலீஸ் விசாரணை வேண்டுமாம்.!
#TNDGP #TNCMO மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா
ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை.”என்கிறார்.
விவகாரம் முற்றுமா,அடங்கிவிடுமா?
பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமைக்கு பெண் தலைவி தமிழிசை என்ன சொல்கிறார்?