
ஐம்பதுகளில் முந்தானை நழுவினாலே சென்சாரின் கத்திரி தயாராகிவிடும்.
தடைகளை தாண்டி சில படங்கள் வந்ததுண்டு.
‘பொன்முடி ‘என்கிற படத்தில் பி.வி.நரசிம்மபாரதி- மாதுரிதேவி நடித்திருந்தனர்.
பாவேந்தர் பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ என்கிற குறுங்காவியம். ஆனால் இயக்குநர் டி.ஆர்.சுந்தரத்துக்கு கதையில் இன்னும் சில மாற்றங்கள் செய்து நீட்டிக்க வேண்டும் என்கிற ஆசை.
கலைஞர் கருணாநிதியை அழைத்து சொன்னார்.
அவரும் பாவேந்தரின் அனுமதி பெற்று கதையை வளர்த்தார். அந்த காலத்தில் இந்த படம் 15ஆயிரம் அடி நீளத்தைத் தாண்டியிருந்தது. 
1950-ல் வெளியான இந்த படத்தில் மாதுரிதேவியின் படர்ந்த மார்பகங்களின் திரட்சியை ஜாக்கெட்டுடன் படமாக்கியிருந்தார் டி.ஆர்.சுந்தரம்.
படம் பார்த்தவர்களை திரும்பவும் பார்க்கத் தூண்டியது மாதுரியின் கவர்ச்சி.
அதற்குப் பிறகு சென்சார் தணிக்கையில் கவனமாக இருக்க ஆரம்பித்தனர்.
ஆனால் இக்காலத்தில் ‘கிளிவேஜ் ‘( மார்பகங்களின் மையப்பகுதி.)காட்டுவதில் வட இந்திய நடிகைகளிடம் பலத்த போட்டியே நடந்து வருகிறது.
உள்ளாடை இல்லாமலேயே புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்கள்.
அதாவது மேலைநாட்டு நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியை ‘தளர’ விட்டு காட்சி தருகிறார்கள். சில படங்களை இங்கே நீங்கள் பார்க்கலாம்.(விஷாகா சிங்,டாப்சி,நிஷா,பூஜா பத்ரா.)












