பிரேசில் நாட்டில் இருக்கிறது அமேசான் மழைக்காடுகள்.
உலகத்தின் 20 சதவீத சுவாசக்காற்றைத் தருகிற உயிர் காப்பு சாதனம்.
கடந்த சில நாட்களாக இந்த காடுகள் தீயில் கருகிக் கொண்டிருக்கின்றன. உயிரினங்கள் பேரழிவை நோக்கி வெந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இதைப் பற்றி இயற்கை ஆர்வலர்கள் மட்டுமே கண்ணீர் சிந்தி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வல்லரசு நாடுகளை தார்க்குச்சி கொண்டு குத்தி எழுப்ப வேண்டியிருக்கிறது.
நடிகை சிம்ரன் தனது முகநூல் பக்கத்தில் கவலையுடன் பதிவு செய்திருக்கிறார்.
நிலவுலகின் நுரையீரல் அமேசான் மழைக்காடுகள்.அந்த காடுகள் பற்றி எரிகின்றன.உடனே அணைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்
மீடியாக்களும் இதைப் பற்றி கவலைப்படவில்லை.
இன்றைய இளைஞர்கள் எதிர்காலத் தலைமுறையினரை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்