இயக்குநர் வசந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் சமத்துவ பாலின விருது பெற்றதுடன், சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.
திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தாலும் இன்னும் மக்கள் பார்வைக்கு வரவில்லை.விரைவில் வரும் என சொல்கிறார்கள்.
இயக்குநர் சிகரம் பாலசந்தரின் பிரதான மாணவர் வசந்த். வெகுஜன சினிமாவை விட்டு வெகுதூரமாக நிற்கிற இவர் தற்கால கமர்ஷியல் ஃ பார்முலாவுக்குள் உறை பொருளாக கிடக்க விரும்பவில்லை என நினைக்கலாம்.அதுவும் பிழையில்லை.
23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்பட விழா நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்படவிழாக்கள், யுரேஷியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழா என இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபட்டு கொண்டாடப்பட்ட திரைப்படம் தான் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”
தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெறும் ஃபுக்குவாக்கா உலக திரைப்பட விழாவிலும் சிகாகோவில் நடைபெறும் மாபெரும் உலக திரைப்பட விழாவிலும்போட்டிப்பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது!
திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வசந்த் எஸ் சாய்