தமிழ்ச்சினிமாவில் காதல் என்பது பிக்பாஸ் காதல் மாதிரிதானோ ,என்னவோ!
உருகி,மருகி,தழுவி,நெருக்கம் காட்டி எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு “ம்..ஊகும் .சரிப்பட்டு வரலே !” என அறுந்து போன செருப்பினை கடாசுவது போல காதலையும் எறிந்து விடுவார்கள்.
அல்லது எரித்து விடுவார்கள்.
இது உலகத் திரை உலகில் இருந்து உள்ளூர் திரை உலகம் வரை இருக்கிற வழக்கம்தான்.
இதற்கு இவர்கள் மட்டும் விலக்கு ஆக முடியுமா?
தமிழ் சினிமாவில் காதல் திருமணம் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை ஒருவர் தற்போது நான்காவது முறையாக தனது பெயரை மாற்றியுள்ளார்.
அவர் அதிதி மேனன்.
இவருடைய சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.
தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகம். இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார். பின்னர் வேறு ஒரு நடிகையை வைத்து நெடுநல்வாடை படத்தை முடித்தனர் என்பது தனிக் கதை.
அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் இளம் நடிகர் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார்
நடிகர் அபி சரவணன் மதுரையைச் சேர்ந்தவர்.
அபி சரவணன், அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்ததாக சொல்கிறார்கள் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தட்டி விட்டார்..பின்னர் இருவரும் மாறி மாறி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து செய்திகளை இறக்கி வைத்தார்கள் பி.ஆர்.ஓ துணையுடன்!
இதற்கிடையில், அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அபி மற்றும் அதிதி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் 27ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்