கங்கனா ரனாவத்.
துணிச்சலான மனுஷி.
உடல் வனப்பைக் காட்டுவதற்கு தயங்கியதில்லை.
சமுதாயம் சார்ந்த கருத்துகளை வெளியிட அஞ்சியதில்லை.
ஜான்சி ராணியாக நடித்திருக்கிற இவர் தற்போது ஜெயலலிதா பயோபிக் படமான தலைவியில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கப் போகிறார்.
“இன்னும் இரண்டு மாதங்களில் தமிழில் பேச முடியும். நான் தமிழ் கலாசாரம் பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். இப்பவே என்னைஅக்கா.என்றும் அம்மா என்றும் தமிழர்கள் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள்.”என்று சொல்லும் கங்கனா கவர்ச்சி உலகத்தை கடுமையாக விமர்சனம் பண்ணி இருக்கிறார்.
“நமது இயற்கை சூழலுக்கு மிகவும் ஆபத்தாக மிரட்டுவது கிளாமர் உலகம்தான்.செயற்கை இழையாளான ஆடைகளை அணிவதற்கு ஆசைப்படுகிறார்கள்.ஆர்கானிக் ஆடைகளை விரும்புவதில்லை..இந்திய துணிகளையே அணிய வேண்டும் ” என்று சொல்லி இருக்கிறார் கங்கனா.
ஆனால் இது பிரியங்கா சோப்ராவுக்குப் பொருந்துமா?
அவர் அங்கங்களை காட்டுவதிலும் நைலான் ஆடைகளையும் விரும்பி அணிந்து வருகிறார்.
ஆனால் அவர் தற்போது இங்கிலாந்து மருமகளாச்சே! அங்கே எப்படியோ அப்படியே பிரியங்காவும்!