- “சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி,
- சபையிலே வந்து நில்லடி. நடையிலே பதில் சொல்லடி “
என்கிற கதையாகி இருக்கிறது நயன்-அனுஷ்கா போட்டி. தென்னிந்திய சினிமாக்களில் சற்று காஸ்ட்லியான நடிகைகள்தான் இருவரும்.
கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர்கள்.
வாழ்க்கையிலும் ஒருவகையில் ஒத்துப் போகிறவர்கள்.
இருவருக்குமே கல்யாணம் ஆகவில்லை. நயன் லிவ்-இன் ரிலேஷன்சிப் .அனுஷ்கா பிரபாஷுடன் காதலில் சிக்கி இருப்பதாக கிசு கிசு.
இருவருமே ஹீரோயின் சப்ஜெக்ட்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
நயன் செவி கேளாதவராக நடித்து விட்டார். படமும் ஓடியது.லாபமா நட்டமா என்கிற கணக்கெல்லாம் நமக்குத் தெரியாது.
தற்போது ‘நிசப்தம்’ என்கிற படத்தில் ஊமை ஓவியராக நடிக்கிறார் அனுஷ்கா. ஹேமந்த் மதுகர் என்கிற பிரபலம் தான் இயக்குகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கிற படம்.
ஆக நயன்-அனுஷ்கா இருவரில் நடிப்பில் யார் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிற படமாக ‘நிசப்தம் ‘ இருக்கும் என நம்பலாம்.