விஜய்,ஸ்ருதிஹாசன்,ஹன்சிகா, ஸ்ரீதேவி ,சுதீப் ஆகியோர் நடிப்பில், பயங்கர பில் டப்புகளோடு வெளியான புலி ,பாய்ந்த வேகத்தில் பூனையாக ப்போனது எல்லோருக்கும் தெரிந்த கதை தான்! அப்போது ஸ்ரீதேவி உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கு சம்பள பாக்கி விவகாரமும் வெடித்தது. அந்த சமயத்தில் ரெய்டு விவ காரம் இந்த விஷயங்களை அப்படியே மறைத்தது.இச் செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்களும் அதன் பிறகு விட்டு விட்டது. அதன் பிறகு ஏதும் நடக்காத மாதிரி இப்படத்தயாரிப்பாளரும் தனது அடுத்த படத்தயாரிப்பில் இறங்கினார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி மீண்டும் தன் சம்பளபாக்கியை கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ததாக கூறப்பட்டது . காத்திருந்த சில ஊடகங்களும் இச் செய்திகளை வெளியிட்டது இதையடுத்து மீண்டும் புலி பட சம்பளபாக்கி விவகாரம் வெடித்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த படத்தயாரிப்பாளர்கள், இது தான் நடந்தது, ஸ்ரீதேவி தான் அடாவடியாக மீண்டும் சம்பள பணத்தை கேட்கிறார் ,தயரிப்பாளர் சங்கத்திலும் எங்கள் மீது அபாண்டமாக புகார் கொடுத்துள்ளார். ‘சங்கம்’ தான் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் அந்த கடிதத்தை கீழே கொடுத்துள்ளோம் . இதையடுத்து இவ்விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.