வருகிற ஞாயிறு வரை ஓட்டியாக வேண்டும் .
பிக்பாஸில் சரக்கும் இல்லை. மூத்த குடிமக்களை இறக்கி விட்டுப் பார்த்தனர். வாலிப வசந்தங்களுக்கே பெப்பே காட்டுகிற பார்வையாளர்கள் தாத்தா -பாட்டியையா பார்ப்பார்கள். இந்த ஆண்டு பிக்பாஸ்.3 -ல் ஸ்கிரிப்ட்டில் சுரத்தே இல்லை. கமல் மட்டும்தான் சனி ஞாயிறு பார்வையாளர்களை காப்பாற்றி வருகிறார்.
வாயாடி வனிதாவை இறக்கி சண்டையை மூட்டப்பார்த்தார்கள்.ஷெரின் அழுது கண்ணீர் விட்டார். நடித்த காலங்களில் இப்படி அழுது இயல்பாக நடித்திருந்தால் வாய்ப்புகளை இழந்திருக்க மாட்டார்.என்ன செய்வது?
இப்போது வனிதா “உன்னால்தான் தர்ஷனை வெளியேற்றினார்கள்,என வெளியில் பேசிக்கொள்கிறார்கள்?”என்று சொன்னதும் குமுறல் வந்து விட்டது .ஷெரினுக்கு.!
“வனிதாவை பற்றிய ரகசியத்தை “சொல்லத் துணிந்தபோது அவரின் வாயை அடைத்து விட்டார் கருத்து கஸ்தூரி. பிக்பாஸ் உத்திரவு போலும்.
ஆக இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் ஒரு நடிகையின் வண்டவாளம் இன்னொரு நடிகைக்குத் தெரியும் என்பதுதான்.!
அனேகமாக இந்த வருட பிக்பாஸ் வின்னர் ஆணாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. பிக்பாசின் கண்கள் ஒரு பெண்ணுக்கு வலை வீசுவது மாதிரி இருக்கிறது.