சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு பிளாட் வாங்கி கதாசிரியர் கலைஞானத்துக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்.
கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார் “இன்னமும் வாடகை வீட்டில்தான் கலைஞானம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .அரசு அவருக்கு ஒரு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ “முதல்வரிடம் சொல்லி ஆவன செய்வதாகசெய்வதாக”கூறினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அதே விழாவில் ஒரு உறுதி அளித்தார். “நானே ஒரு வீடு வாங்கித் தருகிறேன் “என்பதாக.
அதன்படி சரஸ்வதி பூஜை நாளான இன்று சென்னை விருகம்பாக்கத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பிளாட் வாங்கிக் கொடுத்து பால் காய்ச்சும் விழாவிலும் கலந்து கொண்டார்.