பிகில், பிரச்னையைத் தொடாமல் திரைக்கு வந்து விடுமா என்கிற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டு இருக்கிறது.
வேண்டாத வில்லங்கம் தேடி வரும்போது அதிகார வர்க்கம் அதை அசுர பலம் கொண்டு நசுக்கத்தானே பார்க்கும்?
இங்கே விரும்பாத விருந்தாளி தளபதி விஜய்.
அரசுக்கு என்பதை விட அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர் என சொல்லலாம் .
பிகில் விழாவில் அவர் பேனர் விவகாரத்தைத் தொட்டது சில அமைச்சர்களை கீறி இருக்கிறது.
அதன் விளைவு விரைவில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு விசுவரூபம் எடுக்கலாம் .அதுவரை அரசாங்கமும் அமைச்சர்களும் வாயைத் திறக்க மாட்டார்கள் என்கிறார்கள்.
எந்தெந்த தியேட்டர்களில் பிகில் வெளியாகிறதோ அங்கெல்லாம் கடுமையான கண்காணிப்பு இருக்கும். கருட பார்வையுடன் !
இதற்கிடையில் இன்னொரு சேதி .
முதல்வர் எடப்பாடியை சந்திக்க தளபதி விஜய் நேரம் கேட்டிருந்ததாகவும் அதற்கு ‘சந்திக்க விருப்பம் இல்லை ‘என பதில் வந்து விட்டதாகவும் கோலிவுட்டில் சில புள்ளிகள் சொல்லி வருகிறார்கள். அது உண்மையா பொய்யா என்பதை இருதரப்பில் எவராவது ஒரு தரப்பினராவது சொன்னால்தான் தெரியும்!
பிகில் படம் தொடர்பான தணிக்கை இன்று ( 10 ஆம் தேதி.) நடக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தணிக்கை அதிகாரி டெல்லி சென்று விட்டாராம். அந்த பெண் அதிகாரி மிகவும் நேர்மை தவறாதவர் என பெயர் எடுத்தவர். மத்திய மாநில அமைச்சர்களுக்கு வளைந்து கொடுக்க மாட்டார் என சொல்கிறார்கள். அதனால் திரையிடப்படும் தியேட்டர்களில்தான் கண்காணிப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தியேட்டர் கட்டணம் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் லைசன்ஸ் காலியாகும் ஆபத்து இருக்கிறது.
இது ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் 140 கோடியில் தயாரித்து 142 கோடி சம்பாதிப்பதற்கு எதுக்குய்யா சினிமா எடுக்கணும் என்று தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறதாம்?
என்னதான் பண்ணுவதாம்?