இந்தியப் பிரதமரும் சீனப் பிரதமரும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசியது பெரு மகிழ்ச்சி.
இவர்களது சந்திப்பினால் மாமல்லபுரம் இந்திய அரசிய வரலாற்றில் இடம் பெறுகிறது. சுற்றுலா தளத்தின் மேன்மையும் அதிகமாகிறது.
தமிழரின் அடையாளமான வேட்டி,துண்டு அணிந்து பிரதமர் மோடி காட்சி அளித்தது தமிழர்களுக்கு பெருமை. ஒரு வட இந்தியர் தனது பாரம்பரிய உடையை தவிர்த்து தமிழ்நாட்டுக்குரிய ஆடையை அணிந்தது நமக்கு கவுரவம் !
இதில் இருந்தே இந்தியா என்பது ஒரே நாடல்ல அது பல கலாச்சாரங்களை கொண்டது என்பதை அவர் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார். நாங்கள் பிறப்பால் தமிழர்கள் .உணர்வால் இந்தியர்கள். இந்தியா எங்களது நாடு என்பதில் தமிழர்கள் பெருமை அடைகிறார்கள்.