பாண்டவர் அணி- சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரு பிரிவாக பிரிந்து நடிகர்கள் தேர்தலை சந்தித்து இருக்கிறார்கள்.
பாண்டவர்க்கு நாசரும் சங்கரதாஸ் சுவாமிக்கு பாக்யராஜும் தலைமை தாங்கி இருக்கிறார்கள். நாசர்தான் தலைவர் என்றாலும் அரசுக்கு விஷால்தான் குறி.
தயாரிப்பாளர்கள் சங்கம்,நடிகர் சங்கம் ஆகிய இரண்டு சங்கத்தையும் தமிழக அரசு தன்னுடைய கைக்குள் வைத்துக் கொள்ளப் பார்க்கிறது. அரசுக்கு நடிகர் சங்கத்தில் இருக்கிற சில முக்கிய பிரமுகர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அரசு குழு அமைத்து இருப்பதைப் போல சங்கத்துக்கும் தனிக்குழு அமைக்க திட்ட மிட்டிருக்கிறது.
சங்கத்துக்கு தேர்தல் நடத்தினாலும் இன்னமும் வாக்குகள் எண்ணப்படாமல் கோர்ட்டின் முடிவுக்காக காத்திருக்கிறது.
இந்த வழக்கில் அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் “இந்த தேர்தல் நடத்தியதே தவறு” என வாதாடி இருக்கிறார். விசாரணை 18 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.