அரசியல்வாதிகள் கூட இந்த அளவுக்கு தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவார்களா?
“சந்தேகம்தாங்க!”
“மேடம் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லிங்க. மொத்த சிஸ்டமும் கெட்டுப் போயிருக்கு!” என்கிறார் பிக்பாஸ் 3 நடிகை மீரா மிதுன்.
இத்தோடு விட்டாரா, அதான் இல்ல. கோலிவுட்டையும் ஒரு பிடி,!
“புகழ் பெற்ற நடிகைகளைக் கண்டா கோலிவுட்டில் வெறுப்பா பாக்கிறாங்க. ஏன் வெறுக்கிறாங்கன்னு தெரியல.ஹைதராபாத்,பெங்களூரு , மும்பையில இருக்கிற தமிழர்கள் கூட என்னை ஆதரிக்கிறாங்க.
என்னை காண்டா பாக்கிறவங்க பயந்து ஓடிடுவேன் ,தற்கொலை பண்ணிக்குவேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு. நான் யாருன்னு அவங்களுக்கு காட்றேன்!
ஆசிட் வீசிடுவோம்னு மிரட்டுனாங்க. கமிஷனர் கிட்ட புகார் பண்ணினேன். அதுக்குப் பிறகு என் மேல ஏகப்பட்ட புகார்கள். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லிங்க. மேடம் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம போச்சு மொத்த சிஸ்டமும் கெட்டுப் போயிருக்கு!”என்கிறார் மீரா மிதுன்.
இப்ப அவர் சென்னையில் இல்ல. மும்பைய்க்கு போயிட்டார். அங்கேயாவது நடிக்க வாய்ப்பு கிடைக்கிதான்னு பார்க்கலாம்.