- காதலின் சூத்திரம்
- தன்னை விளக்க
- இயலாமல் தவித்த போது
- அது உன்னையும்
- என்னையும்தானே
- உதாரணம் காட்டும்!
கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல் வரிகளுக்கு இன்று நிஜமான உதாரணமாக இருக்கிறார்கள் படைப்பாளி விக்னேஷ் சிவனும் நடிகை நயன் தாராவும்.!
” மொட்டுகளை உடைத்து விட்டதற்காக செடியிடம் தென்றல் மன்னிப்பு கேட்பதில்லை.
ரோஜாவுக்கு முத்தமிட்டோம் கனவில்!
முள்ளில் உதடு கிழித்தோம்
நிஜத்தில்!” இப்படியான காதல் வரிகளுக்கு வாழ்கிற உதாரணங்கள்தான் விக்கியும் நயனும்!
காதலில் விழுந்தவர்கள் எந்த பள்ளத்தாக்கில் வீழ்ந்தாலும் அடிபடுவதில்லை. அவர்கள் எப்படி வாழ்ந்தாலும் பார்வையாளர்களின் கண்களில் அவர்கள் வித்தியாசமான பூக்கள்தான்!
இதோ, தனக்காக ஒரு படத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் நயன் என்றதும் விக்கி எப்படியெல்லாம் உல்லாசப் படகினை ஓட்டுகிறார்!
- நன்றி தங்கமே!
- உன்னை சந்தித்த பிறகுதான் ,
- வாழ்க்கையின் இனிய தருணங்கள்!
- ஆசிர்வதிக்கப்பட்டவனாகிறேன்
- இந்த நாளுக்கு நன்றி
- இந்த படத்தை ஒப்புக்கொண்டதற்கு நன்றி .
- எனது நல்வாழ்க்கையை அமைத்துத் தரும்.
என காதலிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.