“புகை பிடித்தால் உயிரைக் கொல்லும் னு சொல்றவன் சாராயம் குடிச்சா உயிருக்கு கேடுன்னுதானே சொல்றான். அதனால குடிச்சா பரவாயில்லைன்னு குடிக்க ஆரம்பிச்சிடுறான் .குடிச்சா செத்துப் போவேன்னு சொல்ல வேண்டியதுதானே ,அதை ஏன் சொல்றதில்ல.? அப்படி சொன்னா வருமானம் போயிடும்ல?” என்று ராதாரவி விட்டு விளாசினார்.
“சினிமாவில கார்டு போடுறவன் பீடி சிகரெட்டுக்கு கொடுக்கிற முக்கியத்தை மதுவுக்கு கொடுக்கிறதில்ல. புகையிலைக்கு கொடுக்கிற அதே முக்கியத்தை பிராந்திக்கும் கொடுத்தா என்ன கெட்டா போவே?” என்றும் கேட்டார்.
இந்த வருடம் டாஸ்மாக் கடையில் தீபாவளி சேல்ஸ் 425 கோடி .நாலு நாள் வருமானம்.கடந்த வருஷத்தை விட 130 கோடி அதிக வருமானம்.
ராதா ரவி சொல்வதை போல சினிமாவில் படம் போடுவதற்கு முன்னதாக காட்டுகிற அரசு விளம்பர படத்தில் புற்று நோய்க் கொடுமையை கடுமையாக சித்தரித்திருப்பார்கள். ஆனால் மதுவின் கோரத்தை அவ்வளவாக விவரிப்பதில்லை.
ஒரு வகையில் மதுவின் தீமையை அரசு அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. இல்லெயென்றால் வருஷா வருஷம் தீபாவளி சேல்ஸ் கூடிக்கொண்டே போகுமா?