சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து 4 ஆண்டு சிறைத் தண் டனை விதிக்கப்படடவர் சசிகலா.
அதிமுகவின் பவர் பாக்டரியாக இருந்தவர். இன்றைய அதிமுக அமைச்சர்கள் ,பிரமுகர்கள் அத்தனை பேரும் சசிகலாவின் பாதம் தொட்டு வணங்கியவர்கள்தான்.
ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு இடுப்பு வளைந்து கும்பிடு போட்டு குழைந்தார்களோ அதற்கு சற்றும் குறையாமல் சசிக்கும் கும்பிடு போட்டார்கள்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவர்கள் அத்தனை பேரும் தினகரனைத் தவிர திசை மாறிய பறவைகளாகி விட்டார்கள்.
தற்போது சசிகலாவை மதிப்பதில்லை. இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு சிறைக்குள் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன,அவர் வெளியில் போய் வருகிறார் என்கிற சி. டி வெளியாகியது. அரசே ஒரு கமிஷன் அமைத்து விசாரித்தது. இந்த நிலையில்தான் தற்போது இந்த படம் வெளியாகி இருக்கிறது.
எதோ பங்களாவுக்கு வெளியில் நிற்பது மாதிரி தெரியவில்லையா?