பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழனின் ‘இரண்டு கேரக்டர்களை மறக்கவே முடியாது.
ஒருவர் தென்னவன் , மற்றவர் பாபு.
ஹேய் ராசாத்தி என்கிற இளையராஜாவின் பாடலை இன்றும் கேட்கலாம்.
தென்னவன்,பாபு இருவருமே சிறந்த நடிகர்கள்.
தென்னவன் திடீரென ப்ரெய்ன் ஸ்ட்ரோக் வந்து தனியார் மருத்துவமனை ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நிலைமை இன்னும் சீராகவில்லை பாபுவின் கதையோ பெரும் சோகம். தன்னை கருணைக்கொலை செய்து விடும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அதை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டிருந்தவர்.
இவரை நடிகர் விஜய் சென்று பார்த்த பின்னர் அவரிடம் ஒரு மாற்றம் தெரிந்தது.
ஏசப்பா பற்றி பேச ஆரம்பித்தார்.
அவரால் நடக்க முடியாது.இடுப்புக்கு கீழ் செயல்படவில்லை. ஷூட்டிங்கில் உயரத்தில் இருந்து குதித்தபோது இடுப்பில் விழுந்த அடி அவரை நடமாடவிடாமல் செய்திருக்கிறது.
அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை. தென்னவனின் நினைவு என்று திரும்பும் என்பது தெரியவில்லை.